ஏர் இந்தியாவை 'டாடா' வாங்கியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு!

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இத்தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

Update: 2021-10-01 09:45 GMT

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இத்தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும், கடன் அதிகமாக இருப்பதால் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் வேலையில் அரசு இறங்கியது.

இதனிடையே டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கியதாக காலையில் இருந்து ஊடகங்களில் செய்திகள் பரவியது. இத்தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. பொய்யான தகவல் பரவியதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News