தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.. மத்திய அரசு தகவல்.!

நாடு முழுவதும் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி தேசிய விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதை பெறும் ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் உள்ளிட்டவை குடியரசு தலைவரால் வழங்கப்படும்.

Update: 2021-06-08 04:30 GMT

நாடு முழுவதும் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி தேசிய விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதை பெறும் ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் உள்ளிட்டவை குடியரசு தலைவரால் வழங்கப்படும்.




 


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு வருகின்ற 20ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Similar News