பிரதமர் மோடி பிறந்த நாள்! 8 மணி நேரத்தில் இரண்டு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு சாதனை!

பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை இன்று நாடு முழுவதும் பாஜகவினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

Update: 2021-09-17 12:58 GMT

பிரதமர் மோடி பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17) 8 மணி நேரத்தில் இரண்டு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு சாதனை படைத்துள்ளது. பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை இன்று நாடு முழுவதும் பாஜகவினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

பிதரமர் மோடியின் பிறந்தநாளையொட்டி தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல்லை எட்ட வேண்டும் என்று பாஜக திட்டம் தீட்டியுள்ளது. இந்த முயற்சிக்கு சேவா சமர்பன் அபியான் என்று பெயரிட்டுள்ளது. இன்று தொடங்கி அடுத்த மாதம் அக்டோபர் 7ம் தேதி வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி இன்று தடுப்பூசி செலுத்த துவங்கியதும் நாடு முழுவதும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஆரம்பித்த 6 மணி நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதியம் 1.30 மணியளவில் இந்தியாவில் மட்டும் ஒரு கோடியே 71 ஆயிரத்து 766 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் இரண்டு கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Dinamalar

dinamalar.com/news_detail.asp?id=2846809

Tags:    

Similar News