தமிழகத்திற்கு பேரிடர் நிதியாக ரூ.400 கோடி: மத்திய அரசு.!
இந்த நிதியில் ஆக்சிஜன் உற்பத்தி, வென்டிலேட்டர், ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்கூட்டியே மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதியாக ரூ.8,873 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது தமிழகத்திற்கு ரூ.400 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிதியில் ஆக்சிஜன் உற்பத்தி, வென்டிலேட்டர், ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.