கனமழை எதிரொலி: சென்னை, திருப்பதி ரயில் சேவைகள் இன்று ரத்து!

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-20 07:59 GMT

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.


அதே போன்று ஆந்திர மாநிலம், திருப்பதியிலும் மிக கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் திருப்பதி திருமலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஓடியதால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் வெள்ளநீரில் அடித்துசெல்லப்பட்டுள்ளது. இதனால் பேருந்து, ரயில் சேவைகள் திருப்பதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் எண் (16203, 16204) கொண்டவைகள் இன்று (நவம்பர் 20) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Daily thanthi

Image Courtesy:India Tv News


Tags:    

Similar News