உதைத்துக் கொண்டே இருக்கும் காங்கிரஸ், வலி பொறுத்துக் கொண்டே சுமக்கும் திமுக - காரணங்கள் இதுதானாம்.!
உதைத்துக் கொண்டே இருக்கும் காங்கிரஸ், வலி பொறுத்துக் கொண்டே சுமக்கும் திமுக - காரணங்கள் இதுதானாம்.!
தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் தொடர்ச்சியாக நிலையான ஒரு நண்பனாக காங்கிரஸ் இருந்து வந்தாலும் சமீபத்தில் இரு கட்சிகளிடையே அதிக அளவில் அரசல் புரசல்கள் காணப்படுகின்றன.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை தொடர்புடைய ஏழு தமிழர்கள் விவகாரத்தில் அவர்களை விடுவிக்கவே கூடாது என்ற நிலையில் காங்கிரஸ் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் திமுகவின் நிலை நேர்மாறாக உள்ளது. இந்நிலையில் இவர்களின் விடுதலையை கோருபவர்கள் தமிழர்களே இல்லை என்று காங்கிரஸ் திமுகவை மறைமுகமாக சாடி வருகிறது.
திமுகவில் உள்ள 2 ஆம் கட்ட தலைவர்கள் காங்கிரசை சரமாரியாக வசைபாடி வருகின்றனர், காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு ஒரு சுமை என்றும், செல்வாக்கு இல்லாத அந்த கட்சியை திமுக இனி கழற்றி விட்டுவிடும் என்று சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்புவும் கூட கூறியிருந்தார்.
ஆனால் உண்மையில் காங்கிரசை திமுக எப்போதும் துரத்தி விடாது என்றும், அப்படி துரத்தினால் எப்போதும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் திமுகவுக்கு அது ஆபத்தில் முடியும் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
பொதுவாக சென்ற 3 சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் இடையில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரசின் வாக்கு வங்கி சராசரியாக 5 சதமாக நிலையாக இருந்து வருகிறது, பொதுவாக அனைத்து தேர்தல்களிலும் இது நிரூபிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக எப்போது திமுக அணி வெற்றி பெற்றாலும் அது பெறும் மொத்த வாக்குகள் சராசரி, அதிமுக பெற்ற வாக்கு சராசரியைவிட மிக அதிகமாக சென்றது கிடையாது. ஒரு சதவீதம் அல்லது 2 சதவீத வாக்கு சதவீத அளவில்தான் வெற்றியை சந்தித்து இருக்கிறது.