பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

Update: 2020-12-23 19:28 GMT

இங்கிலாந்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 6 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இங்கிலாந்தில் வரும் அனைத்து விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 6 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர்த்து, மேலும் 50 பயணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும், மற்ற பயணிகளின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது உருமாறிய கொரோனா வைரஸா அல்லது சாதாரண வைரஸா என்பது ஆய்வு முடிவில் தெரியவரும்.
 

Similar News