கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிக்கும்.. கைவிரிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா.!

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிக்கும்.. கைவிரிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா.!

Update: 2020-12-20 10:03 GMT

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் காரணமாக மக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பதற்கான நிலையை உருவாக்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே இனி வரும் நாட்களில் பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். எனவே மக்கள் தேவையின்றி வெளியிடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய அவசர தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கேரளாவை பாருங்கள் என்று கூறியவர்கள் தற்போது எங்கு போய் மறைந்து கொண்டனர் என தெரியவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் அன்றாட தேவைகளுக்காக வேலைக்கும் சென்று வருகின்றனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் கேரள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆட்சியாளர்கள் மக்களை பாதுகாக்க தவறி விட்டனர் என அம்மாநில பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
 

Similar News