மகாராஷ்டிராவில் அதிகமாகும் கொரோனா வைரஸ்: சட்டசபை ஊழியர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு 36 பேருக்கு தொற்று.!
மகாராஷ்டிரா மாநில சட்டசபை ஊழியர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு நடத்திய பரிசோதனையில் 36 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை ஊழியர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு நடத்திய பரிசோதனையில் 36 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடுகிறது. இதனையொட்டி கடந்த 2 நாட்களாக சட்டசபை ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 36 ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
மற்ற உறுப்பினர்களை கொண்டு சட்டமன்றம் நடைபெறும் என சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளா, மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.