விவசாயிகளை போல மீனவருக்கும் கடன் அட்டை: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல் !

விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை போன்ற கிசான் கிரெடிட் கார்டு விரைவில் மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்படும் என்று மத்திய மீன் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Update: 2021-10-25 04:02 GMT

"விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை போன்ற கிசான் கிரெடிட் கார்டு விரைவில் மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்படும்" என்று மத்திய மீன் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தெலங்கானானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய மீன்துறை வளர்ச்சி வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்: விவசாயிகள் அவசர தேவைகளுக்காக குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. அது போன்று விரைவில் மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்படும். 


இந்த கடன் அட்டையால் மீனவர்கள் பெரிதும் பயன் பெறுவர். கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் மீதான ஏற்றுதியை அதிகரிக்கவும், மீன்பிடித் துறைமுகங்களில் குளிர்சாதன கிடங்குகள் அமைத்து சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். இந்த அறிவிப்புக்கு தமிழக மீனவர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News