ரேஷன் கடத்தல்காரர்களின் கட்டுப்பாட்டில் டெல்லி அரசு உள்ளது: கெஜ்ரிவால் மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு.!

ரேஷன் கடத்தல்காரர்களின் கட்டுப்பாட்டில் டெல்லி அரசு இருப்பதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

Update: 2021-06-11 10:03 GMT

ரேஷன் கடத்தல்காரர்களின் கட்டுப்பாட்டில் டெல்லி அரசு இருப்பதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் வழங்கமுடியாமல் தோல்வியடைந்தவர்தான் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால், தற்போது வீடுவீடா ரேஷனு பொருட்கள் வழங்குவது பற்றி பேசுகிறார்.


 



ரேஷன் கடத்தல்காரர்களின் கட்டுப்பாட்டில் டெல்லி அரசு உள்ளது. 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தினை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், டெல்லி, மேற்குவங்காளம் மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை இன்னும் ஏற்காமல் உள்ளது.

டெல்லியில் முதலில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தாதது ஏன்? என்பதனை அரவிந்த் கெஜ்ரிவால் கூறவேண்டும் என்றார்.

Similar News