மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி சமூக நலத் துறை அமைச்சர்! அவருடைய பதவி என்ன ஆனது? வெளியான தகவல்!

Update: 2022-10-10 06:17 GMT

டெல்லியில் கடந்த 5ஆம் தேதி அசோக விஜயதசமி நிகழ்ச்சி நடைபெற்றது.  டெல்லி சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் விழாவில் பங்கேற்றார்.

அப்போது நூற்றுக்கணக்கான மக்கள் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினர். அவர்கள் 'இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை. கடவுள்களை  வழிபட மாட்டேன்' என்று உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் விழா குறித்த படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து விமர்சித்த பாஜக, ராஜேந்திர பால் கவுதம், அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியது.

பாஜக இளைஞர் அணியினர் சனிக்கிழமையன்று கெளதமின் இல்லத்திற்கு வெளியே 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பியும், அமைச்சரின் இல்லத்திற்கு வெளியே உள்ள கம்பத்தின் உச்சியில் ராமர் படத்துடன் கூடிய காவிக்கொடியை ஏற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் போஸ்டர்களை ஒட்டிய பாஜக, அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்று கூறியது. 

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். யாருடைய நம்பிக்கைக்கு எதிராகவும் நான் பேசவில்லை. என்னை சுற்றி பொய் பிரச்சாரம் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

Input From: HindustanTimes 

Similar News