கலவர நேரத்தில் முறையாக செயலிழந்த சிசிடிவி கேமராக்கள் - டெல்லி கலவரம் நாட்டின் அமைதியை சீர்குலைக்க நடந்த சதி !

Delhi Riots 'Pre-Planned, Pre-Meditated Conspiracy', Calculated Attempt To Dislocate Functioning Of Govt

Update: 2021-09-29 05:34 GMT

Delhi riots (representative image)

டெல்லி உயர்நீதிமன்றம் திங்களன்று (27 செப்டம்பர்) வெளியிட்ட அறிவிப்பில், தேசிய தலைநகரில் நடந்த கலவரம் ஒரு "வேகத்தில்" நடக்கவில்லை என்றும், அது அரசாங்கத்தின் செயல்பாட்டை "திசைதிருப்ப" நடந்த முயற்சி என்றும் கூறியது. டெல்லி போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் ரத்தன் லால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது இப்ராகிமுக்கு ஜாமீன் வழங்க மறுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிப்ரவரி 2020அன்று நாட்டின் தேசிய தலைநகரை உலுக்கிய கலவரங்கள் வெளிப்படையாக நடக்கவில்லை. வீடியோ காட்சிகளில் இருக்கும் போராட்டக்காரர்களின் நடத்தை வழக்கு பதிவு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது அரசாங்கத்தின் செயல்பாட்டை சிதைப்பதற்கும், நகரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பதற்கும் நடந்த திட்டமிட்ட முயற்சி என்று நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் உத்தரவில் கூறினார். இதில் கடந்த ஆண்டு டெல்லியில் கைது செய்யப்பட்ட இப்ராகிமுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இப்ராகிம் CAA எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறும் காவல்துறையினர், அப்போது கான்ஸ்டபிள் ரத்தன் லால் இறப்புக்கு காரணமானார்.

சிசிடிவி கேமராக்களின் முறையான துண்டிப்பு, நகரத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முன் திட்டமிடப்பட்ட சதி என்பதை உறுதிபடுத்தியது.

குற்றம் சாட்டப்பட்ட முகமது இப்ராகிம் போராட்டத்தின் போது கத்தி வைத்திருந்தார். தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக மட்டுமே கத்தி எடுத்துச் சென்றதாக இப்ராகிமின் வழக்கறிஞர் வாதிட்டார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News