சபரிமலைக்கு பக்தர்கள் வருவதற்கு அனுமதி- பத்தனம்திட்டா ஆட்சியர் அறிவிப்பு!

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து வருவதால் பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக பத்தனம்திட்டா ஆட்சியர் திவ்யா அறிவித்துள்ளார்.

Update: 2021-11-20 06:11 GMT

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து வருவதால் பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக பத்தனம்திட்டா ஆட்சியர் திவ்யா அறிவித்துள்ளார்.

கனமழை மற்று பம்பை ஆற்றில் சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருதி சபரிமலைக்கு வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பம்பை ஆற்றில் வெள்ளநீர் குறைந்ததால் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக ஆட்சியர் திவ்யா அறிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Deccan Herald


Tags:    

Similar News