செறுப்பை கடித்ததற்காக நாயை டூ வீலரில் கட்டி இழுத்துச்சென்ற கொடுமை.!

மலப்புரம் மாவட்டத்தின் எடக்கரா என்ற பகுதியை சேர்ந்தவர் கான்ஸ்டன்ட் சேவியர். இவரது செறுப்பை நேற்று முன்தினம் ஒரு நாய் கடித்துள்ளது.

Update: 2021-04-19 04:15 GMT

கேரளாவில் செறுப்பை கடித்ததற்காக நாயை டூ வீலரில் கட்டிக்கொண்டு, சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தின் எடக்கரா என்ற பகுதியை சேர்ந்தவர் கான்ஸ்டன்ட் சேவியர். இவரது செறுப்பை நேற்று முன்தினம் ஒரு நாய் கடித்துள்ளது. இதனை அறிந்த கான்ஸ்டன்ட் சேவியர், அந்த நாயை பழிவாங்குவதற்காக, திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி தனது டூ வீலர் பின்புறமாக நாயை கயிற்றால் கட்டிக்கொண்டு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச்சென்றுள்ளார்.




 



 


இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து சேவியர் மீது விலங்குகள் வதைத்தட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாய் படுகாயத்துடன் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே சேவியரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் சேவியர் ஜாமீன் பெற்று விடுதலை பெற்றுள்ளார்.




 


வாய் இல்லாத ஜீவனை கொடுமைப்படுத்தும் நிகழ்வு கேரளா மாநிலத்தில் அடிக்கடி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News