புர்காவில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது!

Update: 2022-02-28 07:51 GMT

தெலங்கானா மாநிலத்தில் புர்காவில் மறைத்து தங்கத்தை கடத்தி செல்வதற்கு முயற்சியத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது புர்கா அணிந்த வந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அப்பெண்ணை சோதனையிட்டனர். அப்போது அவர் புர்காவில் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை தனது உடையில் கட்டி வந்துள்ளார்.

அவர் துபாய் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து தப்பிப்பதற்காக சிறு, சிறு பாசிகளாக செய்து அதனை ரோடியத்தின் மூலம் முலாம் பூசி தனது புர்காவில் தைத்துக்கொண்டார். போலீசார் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுப்பிடிக்க மாட்டார்கள் என்று யோசித்து இது போன்ற செயலில் இறங்கியுள்ளார் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். பிடிப்பட்டவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Puthiyathalaimurai

Image Courtesy:The New Indian Express

Tags:    

Similar News