முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நலமுடன் இருக்கிறார்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பா.ஜ.க.!

பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா, சுமித்ரா மகாஜன் நலமுடன் உள்ளார்.

Update: 2021-04-23 08:06 GMT

பாஜகவின் மூத்த தலைவரும், மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் நலமுடன் இருப்பதாக அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுமித்ரா மகாஜன் இறந்துவிட்டார் என்று செய்தி அறிந்து வருத்தமடைந்ததாக, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நேற்று இரவு ட்வீட் ஒன்று பதிவிட்டிருந்தார்.




 


ஆனால், சுமித்ரா மகாஜன் உடல்நிலை பற்றி குடும்பத்தினரோ அல்லது பாஜக சார்பிலோ எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், சசி தரூர் ட்வீட்டர் பதிவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதே போன்று பாஜகவை சேர்ந்த சிலரும் சமூக வலைதளங்களில் சுமித்ரா மகாஜனுக்கு இரங்கல் தெரிவித்து ஷேர் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




 


இந்நிலையில், இது பற்றி விளக்கம் அளித்துள்ள பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா, சுமித்ரா மகாஜன் நலமுடன் உள்ளார். அவர் பற்றிய மரண செய்திகள் வெறும் வதந்தி என்று கூறினார். அதே போன்று தனது அம்மா நலமுடன் இருப்பதாக, சுமித்ரா மகாஜன் மகனும் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தெரியமால் ட்வீட் போட்ட சசி தரூர், தனது ட்வீட்டை நீக்கிவிட்டு, மன்னிப்பு கேட்டுள்ளார். சுமித்ரா மகாஜன் மிக நீண்டகாலம் நலமுடன் வாழவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News