வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் உயர்வு.. நிதி அமைச்சகம் தகவல்!

வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கின்ற வகையில், குடும்ப ஓய்வூதியத்தை, கடைசியாக பெற்ற சம்பளத்தில் 30 சதவீதமாக அதிகரிக்க இந்திய வங்கிகளின் சங்கங்கள் கூறியிருந்த திட்டத்துக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2021-08-26 13:04 GMT

வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கின்ற வகையில், குடும்ப ஓய்வூதியத்தை, கடைசியாக பெற்ற சம்பளத்தில் 30 சதவீதமாக அதிகரிக்க இந்திய வங்கிகளின் சங்கங்கள் கூறியிருந்த திட்டத்துக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.30,000 முதல் ரூ.35,000வரை அதிகரிக்கும். இந்த அறிவிப்பை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மும்பையில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாக நிதி சேவைகள் துறை செயலாளர் அறிவித்தார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai

https://www.puthiyathalaimurai.com/newsview/113929/Family-pensions-of-finance-ministry-and-bank-employees-will-be-raised-

Tags:    

Similar News