தேச விரோதிகள் மதராசாக்களில் இருந்து உருவாகின்றனர்! மூடுவதற்கு கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ.க்கு கொலை மிரட்டல்!

Update: 2022-03-26 12:39 GMT

தேச விரோதிகள் மற்றும் பயங்கரவாதிகள் அனைவரும் மதராசாக்களில் இருந்து வெளிவருகின்றனர் என்று கூறிய திரிபுரா எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம், தாலை மாவட்டம் ஜவ்மெனு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஷம்பு லால் ஜக்மா, கடந்த 22ம் தேதி சட்டசபையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: பயங்கரவாதிகள், தேச விரோத சக்திகள் உருவாகின்றனர் எனவே திரிபுரா மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய மத கல்வியை சொல்லிக்கொடுக்கும் கல்வி நிறுவனமான மதராசாக்களை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இந்நிலையில் மதராசா பற்றி கருத்து கூறிய எம்.எல்.ஏ., ஷம்பு லாலு ஜக்மாவுக்கு இஸ்லாமியர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மதராசாவை மூட வேண்டும் என்று சொல்லும் உங்களை கத்தியால் குத்தி கொலை செய்வேன் என்று ஒருவர் எம்.எல்.ஏ.வுக்கு வீடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அடையாளர் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News