தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா காலமானார்!

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா 88 வயது முதிர்வால் ஆந்திராவில் காலமானார்.

Update: 2021-12-04 04:48 GMT

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா 88 வயது முதிர்வால் ஆந்திராவில் காலமானார்.

தமிழகத்தின் ஆளுநராக கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அது மட்டுமின்றி ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சராக 2009 முதல் 2010வரை சுமார் ஒரு ஆண்டு பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், வயது முதிர்வால் உடல்நலக்குறைவு காரணமாக தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காலமாகியுள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Deccan Chronicle


Tags:    

Similar News