மத்திய நிதியமைச்சர் தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்.!

ஜி.எஸ்.டி என்னும் சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா பெருந்தொற்று காரணமாக 3 மாதத்திற்கு ஒரு முறை ஜி.எஸ்.டி. கூட்டத்தை நடத்த முடியவில்லை.

Update: 2021-05-28 02:37 GMT

ஜி.எஸ்.டி என்னும் சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா பெருந்தொற்று காரணமாக 3 மாதத்திற்கு ஒரு முறை ஜி.எஸ்.டி. கூட்டத்தை நடத்த முடியவில்லை.




 


இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு பின்னர் இன்று காலை (மே 28) 11 மணியளவில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இது 43வது கூட்டமாகும்.


 



மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலிக்காட்சி மூலமாக கூட்டத்தை நடத்துகிறார். இதில் நிதித்துறை ராஜாங்க அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில நிதியமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.

Similar News