கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!

Update: 2022-03-15 11:08 GMT

கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த உத்தரவு செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவர்கள் சிலருக்கு அரசு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அனைவரும் சீருடையை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதற்கு இஸ்லாமியர்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இது சம்மந்தமாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கின்ற வரையில் கல்வி நிலையங்களில் மாணவர்கள் எவ்வித மத அடையாளத்துடன் ஆடைகள் உடுத்தி வரக்கூடாது என்று நீதிமன்றம் வாய்மொழி உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசராணைக்கு வந்தது, இதனை விசாரித்த நீதிபதிபகள் கிருஷ்ணா எஸ்.தீட்சித், ரிது ராஜ் அவஸ்தி, ஜே.எம் காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு கூறியுளளது. ஹிஜாப் தடைக்கு எதிராக சரியான முகாந்திரங்கள் முன்வைக்கப்படவில்லை. அதே சமயம் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியமானதும் இல்லை. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தடை உத்தரவு செல்லும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News