சிவன் கோயிலை இடித்து ஜாமியா மசூதி கட்டப்பட்டது: இந்துக்கள் புகார்!

Update: 2022-05-23 14:36 GMT

மத்திய பிரதேச மாநிலம், போபால் ஜாமியா மசூதியும் சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாக மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியது. இதன் பின்னர் ஒரு வழியாக ராமர் கோயிலை மீண்டும் கட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் பின்னர் மிகப்பெரிய கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே நாடு முழுவதும் பல்வேறு நினைவு சின்னங்கள் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் கூட இந்து ஆலயங்களாகவே இருந்தது என்ற கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. அதில் தாஜ்மஹாலும் உள்ளது. இதனை தொடர்ந்து வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகே அமைந்திருக்கும் கியான்வாபி மசூதியும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், போபால் ஜாமியா மசூதி மீது இந்து அமைப்புகள் புகார் அளித்துள்ளது. ஜாமியா மசூதி முன்பு இந்து ஆலயமாக இருந்ததாகவும், அதனை இடித்துவிட்டுதான் ஜாமியா மசூதி எழுப்பப்பட்டுள்ளது. எனவே ஜாமியா மசூதியிலும் ஆய்வு செய்வதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Source: One India Tamil

Image Courtesy: The Hindu

Tags:    

Similar News