நெருங்கிய நண்பனாக இருந்த ஆஸ்திரேலியா சீனாவுக்கு எதிரியாக மாறியது எப்படி ? - நிலவும் பனிப்போரின் காரணங்கள்.!
நெருங்கிய நண்பனாக இருந்த ஆஸ்திரேலியா சீனாவுக்கு எதிரியாக மாறியது எப்படி ? - நிலவும் பனிப்போரின் காரணங்கள்.!
ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கு இடையே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பொருளாதார நல்லுறவுகள் நிலவின. ஆனால் இந்த ஆண்டில் பல விரிசல்கள் உண்டாக்கியுள்ளன. இதற்கு காரணம் ஆஸ்திரேலியா, உய்குர் இஸ்லாமியர்களை சீனா நடத்தும் விதம் மற்றும் ஹாங்காங் போராட்டங்கள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருவதால் சீனா ஆஸ்திரேலியா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கொரோனாவின் ஆரம்பம் மற்றும் தோற்றம் குறித்த உலகளாவிய விசாரணை சீனாவின் மீது நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா முதன்முதலாக கூறியது சீனாவுக்கு மேலும் அதிருப்தியை உண்டாக்கியது.
இதற்கு காரணம் அரசியல் முதல் கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் வரை ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு குறித்து ஏற்பட்ட அச்சத்தின் விளைவு தான் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக சீனா - இந்தியா இடையே எல்லை மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் இந்தியா அமெரிக்கா, பிரான்சுடன் இணைந்து நடத்திய மலபார் போரில் இதுவரை பங்கேற்காத ஆஸ்திரேலியா பங்கேற்றதும் சீனாவுக்கு கடும் கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ஆஸ்திரேலியா சிறந்த கடல் வலிமை பெற்ற நாடாகும்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் போரில் ஈடுபட்டபோது, அமெரிக்காவுக்கு உதவியாக அந்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் தங்கி இருக்கும் ஆஸ்திரேலிய ராணுவத்தினர் பல சந்தர்பங்களில் 39 பேரை கொடூரமாக கொன்றது போர்க்குற்றம் என ஆப்கான் ஆஸ்த்ரேலியா மீது குற்றம் சாட்டியது. பல நாடுகளும் இதை கண்டித்த நிலையில் ஆஸ்திரேலியா இது குறித்து விசாரணை கமிஷன் அமைத்து தம் படையினருக்கு தண்டனை அளித்தது.