உடல்நலக் குறைவு.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர்.!

உடல்நலக் குறைவு.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர்.!

Update: 2021-01-07 18:19 GMT

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சந்திரசேகர் ராவின் மருத்துவ பரிசோதனைகள் செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் நடத்தப்பட்டன என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடக அறிக்கையின்படி, கே.சி.ஆர் சந்திரசேகர் ராவ் நுரையீரலில் வீக்கம் மற்றும் எரியும் உணர்வு இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து சந்திரசேகர் ராவ் செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி. ஸ்கேன் முதற் கட்டமாக செய்யப்பட்டது. என குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மருத்துவமனையில் குவியத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News