அதிநவீன தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் இணையும் இஸ்ரேல்.. அதிகரிக்கும் இந்திய முதலீடு!

அதிநவீன தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற இஸ்ரேல் விருப்பம்.

Update: 2023-05-11 04:10 GMT

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் நேற்று இஸ்ரேல் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது ராஜ்நாத் சிங் தற்சார்பு இந்தியா கொள்கை மூலம் உள்நாட்டு மயமாக்கல் முயற்சியில் இந்தியாவின் முன்னுரிமை பற்றி எடுத்துரைத்தார். இஸ்ரேல் நிறுவனங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன் இந்தியாவில் முதலீடு செய்யவும் அழைப்பு விடுத்தார்.


மேலும் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ராணுவத் தாளவாட உற்பத்தியில் ஈடுபடவும் அழைப்பு விடுத்தார். இந்திய மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே சுமார் 30 ஆண்டுகால நல்வரவு நீடித்து வருவதாகவும் இனி அது மேலும் தொடரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்திய மற்றும் இஸ்ரேல் இணைந்து பணியாற்று இரு நாடு அமைச்சர்களும் அமைச்சர்களும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.


இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் விடுத்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு இந்தியாவிற்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, அதி நவீன தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பமும் தெரிவித்தார். இரு அமைச்சர்களும் இரு நாடுகளுக்கு இடையேயான 30 ஆண்டுகால தூதரக உறவை அங்கீகரித்து இதனை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News