உபரி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் ! - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் மனுசுக் மாண்ட்வியா, அக்டோபர் மாதம் 30 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் அரசுக்கு கிடைக்கும். அதே போன்று இன்னும் மூன்று மாதங்களில் 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும்.

Update: 2021-09-20 12:10 GMT

இந்தியாவிடம் உள்ள உபரி தடுப்பூசிகள் அடுத்த மாதம் முதல் ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் மனுசுக் மாண்ட்வியா, அக்டோபர் மாதம் 30 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் அரசுக்கு கிடைக்கும். அதே போன்று இன்னும் மூன்று மாதங்களில் 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும்.

நாட்டில் இதுவரை 81 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் 10 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டள்ளது. நமது நாட்டு மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும் உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் பணி அடுத்த காலாண்டில் துவங்கும். தடுப்பூசி மைத்ரி மற்றும் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் அளித்துள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்றுகின்ற வகையில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dailythanthi


Tags:    

Similar News