'இந்தியா அமைதியை விரும்பும் தேசம்! ஆனால்...' - ராஜ்நாத் சிங்'கின் எச்சரிக்கை

இந்தியா அமைதியை விரும்பும் தேசமாகும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-18 13:58 GMT

இந்தியா அமைதியை விரும்பும் தேசமாகும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதி மற்றும் நல்லிணக்கத்தை குலைக்க முயற்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்தார். டெல்லி ஆயுதப்படை வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் தன்னார்வல தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர் ஆயுதப்படைகளுக்கு உள்நாட்டு அதிநவீன ஆயுதங்களை வழங்கி பாதுகாப்புத் துறை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை' என்றார்.

எல்லைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு வருவதாகவும் அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளதாகவும் கூறினார். மத ரீதியான தடைகளை தாண்டி தேசத்தை கட்டி எழுப்புவதற்கு பங்களிக்கு மாறு பொது மக்களை கேட்டுக் கொண்டார்.



Source - Polimer News

Similar News