இந்திய விமான படைக்கு புதிய தளபதி !

Breaking News.

Update: 2021-09-22 14:07 GMT

இந்திய விமான படைக்கு புதிய தளபதி 

இந்திய விமானப் படையின் தளபதியாக இருக்கும் ஆர்.கே.எஸ். பதூரியா வருகிற 30-ந் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.

இதனால் புதிய தளபதியாக ஏர்மார்‌ஷல் விவேக் ராம் சவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது விமானப் படையின் துணை தளபதியாக பதவி வகித்து வருகிறார். 

விவேக் ராம் சவுத்திரி 1982-ல் விமானப் படையில் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்தார். மிக் -29 விமானத்தை இயக்குவதில் வல்லவர். இதுவரை 3,800 மணிநேரம் போர் விமானத்தை இயக்கி இருக்கிறார்.

பதவி ஓய்வு பெறும் விமானப் படை தளபதி பதூரியா கடந்த 2019 செப்டம்பர் 9-ந் தேதி தளபதி பொறுப்பை ஏற்றார். 2 ஆண்டுகளுக்குள் அவர் பதவி ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

Maalaimalar

Tags:    

Similar News