இந்திய ராணுவம் நடத்திய எதிர்வினை ஏவுகணை சோதனை - வல்லரசு தரத்தில் உயரும் இந்திய ராணுவம்

டி.ஆர்.பி.ஓ மற்றும் இந்திய ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட உடனடி எதிர்வினை ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

Update: 2022-09-09 14:00 GMT

டி.ஆர்.பி.ஓ மற்றும் இந்திய ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட உடனடி எதிர்வினை ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.


பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட உடனடி எதிர்வினை ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.


ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து நடத்தப்பட்ட ஆறு சோதனைகளும் வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.


இது இந்திய ராணுவத்தின் மதிப்பீட்டு சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனையை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Source - Polimer NEWS

Similar News