அதிகரிக்கும் கொரோனா.. ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு.!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு அரசுத்துறை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு அரசுத்துறை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
கொரோனாவுக்கு மத்தியில் தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் அச்சம் கொண்டிருந்தனர். இதனால் தேர்வு தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த வகையில், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வும் (மெயின் தேர்வு) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.