காஷ்மீர்: அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.!

காஷ்மீர்: அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.!

Update: 2020-12-09 10:23 GMT
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் இந்திய இராணுவம் மற்றும் காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் புதன்கிழமை அன்று காலை இரண்டு அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

புல்வாமா மாவட்டத்தில் டிக்கென் கிராமத்தில் ஒரு வீட்டில் இரண்டு மூன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறை, இராணுவம் மற்றும் CRPF வீரர்கள் சேர்ந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். 

இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை காவல்துறை செய்தி தொடர்பாளர் உறுதி செய்து ட்விட்டில் தெரிவித்தார். மேலும் இன்னும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். 

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளம் குறித்து காவல்துறை எதுவும் வெளியிடவில்லை. நேற்று இரவில் இருந்து காஷ்மீரில் படைகளால் நடைபெற்ற மூன்றாவது தேடுதல் நடவடிக்கை ஆகும்.  மீதம் இரண்டு நடவடிக்கைகள் காஷ்மீரின் வடக்கு பகுதியில் நடைபெற்றது. 

இந்த தீவிரவாதிகள், தற்போது நடந்து கொண்டிருக்கும் ஜம்மு&காஷ்மீரின் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்(DDC) தேர்தலைச் சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த தேர்தல் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி முடிவடைய உள்ளது. ஜம்மு&காஷ்மீரில்  சட்டம் 370 திரும்பப் பெற்ற பின்பு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். 

Similar News