கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

கேரளாவில் கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Update: 2021-04-08 13:21 GMT

கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர்.


 



அப்போது பொதுமக்கள், வேட்பாளர்கள் என யாருமே கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வில்லை. முககவசம் மற்றும் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டனர் என்றே சொல்லலாம். இதன் காரணமாக கேரளாவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News