கேரளா: மக்களின் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்ட கொரோனா !

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக, ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாட தடைவிதித்த கேரள அரசாங்கம்.

Update: 2021-08-12 13:30 GMT

கேரளாவில் தற்போது இருக்கும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் மக்களுக்கு பண்டிகைகளை கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இந்தியாவில் உள்ள முழுவதுமான மொத்த பாதிப்பில் கேரளாவில் மட்டும் 50% பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்தநிலையில், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன.


இதனால் மக்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ளது. அதுவே தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது. இதனால், கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு தலைமை செயலாளரும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான வி.பி.ராய் அவர்கள் கூறுகையில், "பண்டிகைகளையொட்டி, உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் 12ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடவோ, பெருமளவில் கூடவோ தடை விதிக்கப்படுகிறது. 


புதிய பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் பரிசோதனை அதிகரிக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை 15ம் தேதி தொடங்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க, நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முடிந்தவரை மக்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தியவர்கள் வெளியிடங்களில் செல்வது குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். 

Input: https://www.indiatoday.in/coronavirus-outbreak/story/kerala-accounted-for-more-than-50-percent-india-covid-cases-last-week-1839308-2021-08-11

Image courtesy: India Today 


Tags:    

Similar News