ரக்ஷா பந்தன்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் ! - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து !

குடிரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ரக்ஷா பந்தன் விழா அன்பு, பற்று, சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான நம்பிக்கையின் ஓர் அடையாளமாகும்..

Update: 2021-08-22 02:53 GMT

குடிரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ரக்ஷா பந்தன் விழா அன்பு, பற்று, சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான நம்பிக்கையின் ஓர் அடையாளமாகும்..

நமது நாட்டின் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் இந்த விழா வலுப்படுத்துகிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளில் மக்கள் தேசத்தை கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை காப்பதில் உயர் முக்கியத்துவம் அளிக்கக் கூடிய அவர்களுடைய விருப்பங்களை தடையின்றி நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வகையிலான ஒரு இணக்கமான சமூகத்தை கட்டமைப்பதில் பங்களிப்பை செய்வதற்கு இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: Dailythanthi

Image Courtesy:India Today

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/22053501/Lets-Dedicate-Ourselves-Towards-Ensuring-Womens-Safety.vpf

Tags:    

Similar News