ஜார்க்கண்ட் மலைவாழ் மக்களை குறிவைக்கும் மிஷனரிகள் - உள்துறை அமைச்சகத்திடம் பகீர் புகார்!
ஜார்க்கண்ட் மலைவாழ் மக்களை குறிவைக்கும் மிஷனரிகள் - உள்துறை அமைச்சகத்திடம் பகீர் புகார்!
இந்திய மற்றும் சர்வதேச கிறிஸ்தவ மிஷனரிகள் முழு ஆசியாவையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் நோக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இது 1999-ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் இந்தியாவிற்கு வந்த போது வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வருகை தந்த போப் இரண்டாம் ஜான் பால், ஆசியா முழுவதும் நற்செய்தியைப் பரப்புவது கிறிஸ்தவர்களின் தார்மீகக் கடமை என்று கூறினார்.
கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றுவதற்கான சர்ச்சின் இந்த செயல்பாடுகளுக்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பிற இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. மதம் மாற்றுவதற்கு வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவது பற்றியும் இந்து அமைப்புகள் தொடர்ந்து உண்மைகளை வெளியிட்டு வருகின்றன.
#FCRAViolation #Ranchi #Jharkhand's Calvary Gospel Ministries Trust got Rs 90.23 Cr from radical #Christian All India Mission- AIM for evangelization, @JharkhandPolice Special Branch accused them of funding violent activities, wrote @HMOIndia for cancellation #ConversionMafia ++ pic.twitter.com/tXWyfFGuNG
— Legal Rights Observatory- LRO (@LegalLro) January 5, 2021
இந்த All India Mission அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் என்.ஜே வர்கீஸ் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்று அவர்களின் வலைத்தளத்தில், “ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்துவிடம் அழைத்து வருவது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அப்பாவி வனவாசிகளை குறி வைத்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் இந்த அமைப்பு, அப்பகுதியில் நடைபெறும் குற்றச் செயல்களுக்கு நிதியளிப்பதாக ஜார்க்கண்ட் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் அதிகளவில் செயல்படும் மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கும் கூட அவர்கள் நிதி உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் அரசுக்கு எதிராக ஊர்வலங்கள், தர்ணா, போராட்டங்கள் நடத்துவதற்கும் வன்முறை செயல்களில் ஈடுபடுவதற்கும் இது போன்ற கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாட்டு நிதியை பயன்படுத்துவதாக ஜார்க்கண்ட் காவல் துறையினர் கூறியுள்ளனர். இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மேலும் 88 கிறிஸ்தவ மிஷினரிகளின் NGO-க்களுக்கு ₹292 கோடி ரூபாய் நிதிகள் கிடைத்திருப்பதாகவும், இது தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் ஜார்கண்ட் மாநிலத்தின் சிறப்பு காவல்துறையினர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளதாகவும் LRO கூறியுள்ளது.