மும்பையில் கனமழை.. ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியது.!

மும்பையில் கனமழை பெய்து வரும் காரணங்களால் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-09 07:43 GMT

மும்பையில் கனமழை பெய்து வரும் காரணங்களால் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை அதிகரித்து வரும் சூழ்நிலையில், மும்பை நகரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சியோன் ரயில் நிலையம், மற்றும் ஜிடிபி நகர் ரயில் நிலையம் இடையேயுள்ள ரயில் தண்டவாளங்கள் தண்ணீரால் மூழ்கியுள்ளது.




 


இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை, குர்லா மற்றும் உள்ளூர் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மும்பை நகரம் முழுவதும் தண்ணீரால் மூழ்கியுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் வடிகால் சரியாக இல்லாததால் தண்ணீர் அதே இடங்களில் குளம் போன்று தேங்கியுள்ளது.

Similar News