ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு? ஆன்லைனில் நடத்தவும் பரிந்துரை.!

ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு? ஆன்லைனில் நடத்தவும் பரிந்துரை.!

Update: 2021-01-04 17:31 GMT

நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய சுகாதார துறைக்கு தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்விற்கு சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் தற்போது ஆண்டுக்கு சுமார் 11 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகின்றனர். நீட் தேர்வு எழுதும் போது, மாணவர்கள் சந்திக்கும் சிரமங்களை களைய தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்த அனுமதிக்க கோரி மத்திய சுகாதார துறைக்கு தேசிய தேர்வு முகமை கடிதம் வாயிலாக பரிந்துரைத்துள்ளது.
மேலும், நீட் தேர்வினை ஆன்லைன் வழியே நடத்துவது குறித்தும் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டம் சாத்தியமானால் மாணவர்களுக்கு சுமை குறையும் என்பது பெற்றோர்களின் கருத்தாகவும் உள்ளது.
 

Similar News