இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நாளை பதவியேற்பு.!
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா நாளை (ஏப்ரல் 13) பதவி ஏற்க உள்ளார். தற்போது 3 பேர் கொண்ட இந்திய தேர்தல் ஆணையராக தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா உள்ளார்.
தற்போது இவரது பதவிகாலம் நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷில் சந்திரா நேரடி வரிகள் ஆணைய தலைவராக உள்ளார். இவர் ஐஐடியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.