சாகர் பரிக்ரமா: மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒரு வெற்றிகரமான பயணம்..

Update: 2023-10-11 03:01 GMT

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் சாகர் பரிக்ரமா பயணம் என்ற மாபெரும் மீனவர் மற்றும் மீன் விவசாயிகளை சந்திக்கும் திட்டம் மார்ச் 2022 முதல் குஜராத்திலிருந்து மேற்கு வங்கம் வரை சுமார் 8000 கி.மீ நீளமுள்ள கடல் மார்க்கமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குஜராத்தின் மாண்டவியில் தொடங்கி புதுச்சேரியின் மாஹே மற்றும் 8 கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 8 கட்டங்களாக 68 இடங்களில் 4676 கி.மீ தூரம் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் இணையமைச்சர்கள் இதுவரை பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒன்பதாம் கட்ட பயணம் நடைபெற்று வருகிறது.


பயணத்தின் இரண்டாம் நாளான இன்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் வழங்கினர். மீனவர்களை அவர்களின் வீட்டு வாசலில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளைப் புரிந்துகொள்வது, நிலையான மீன்பிடிப்பை ஊக்குவித்தல் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் திட்டங்களை கொண்டு செல்வதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.


இதுவரை இந்திய அரசால் செயல்படுத்தப்படும் மீன்வளம் தொடர்பான திட்டங்கள், திட்டங்கள் குறித்த தகவல்களைப் பரப்புவதற்கும், சிறந்த நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவதற்கும், பொறுப்பான மீன்வளத்தை ஊக்குவிப்பதற்கும், அனைத்து மீனவ மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் முக்கிய பங்கு வகித்துள்ளது. மீனவர்கள உடனான இந்த உரையாடல்கள், கள நிலவரங்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், கிராம அளவிலான கள நிலவரங்களை பார்வையிடுவதற்கும், அரசாங்க மானியங்கள் மற்றும் முன்முயற்சிகள் களத்திற்கும் தேவைப்படும் பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதற்கு இருவழி தகவல்தொடர்பு நிறுவப்பட்டுள்ளன.

Input & Image courtesy: News

Tags:    

Similar News