நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க திட்டம் தீட்டும் தாவூத் இப்ராஹிம்! NIA பகீர் தகவல்!

Update: 2022-02-20 07:50 GMT

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தனது இந்திய தொடர்புகளை வைத்து, இந்திய நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை திட்டம் தீட்டி வருவதாக தேசிய புலனாய்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.


கடந்த இரு  தினங்களாக, தாவூத் இப்ராகிம் மற்றும் அவருக்கு தொடர்புடைய நபர்களின்  மேலுள்ள  பண மோசடி வழக்கு விசாரணையை,  அமலாக்கத் துறையினர் தெற்கு மும்பை பகுதிகளில் தாவூதுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில்  சோதனையிட்டனர்.


அப்பொழுது  NIA திரட்டிய   தகவலின் படி, " நாட்டின் தலைநகர்  டில்லி மற்றும் மும்பை ஆகிய மாநகர பகுதிகளை குறிவைத்து, தனது இந்திய நிழல் உலக  கூட்டாளிகளின்  உதவியோடு, அதி பயங்கர வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாவூத் இந்திய நாட்டிற்கு   சேதம் விளைவிக்க  திட்டம் தீட்டி வருவதாக தெரியவந்துள்ளது."


தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளின்  செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்று, மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு முகமைக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது.

The Commune



Tags:    

Similar News