நிதிஷ் குமாருக்கு வயதாகிவிட்டது அதான் உளறுகிறார் - போட்டு தாக்கும் பிரஷாந்த் கிஷோர்

'வயதாகி விட்டதால் தற்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உளறுகிறார்' என பிரபல தேர்தல் கணிப்பு நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

Update: 2022-10-10 13:50 GMT

'வயதாகி விட்டதால் தற்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உளறுகிறார்' என பிரபல தேர்தல் கணிப்பு நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தல கட்சியில் சேர்வதாக நிதிஷ்குமார் கூறியதாக பிரசாந்த் கிஷோர் முன்பு தெரிவித்து இருந்தார். இது குறித்த கேள்விக்கு பதில் நிதிஷ் குமார் அது பொய் என்றும் பிரசாந்த் கிஷோரை பா.ஜ.க பின்னால் இருந்து இயக்குகிறது எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், நிதிஷ்குமாருக்கு வயதாகிவிட்டது எனவும் அதன் விளைவு நிதிஷ்குமார் வார்த்தைகளில் வெளிப்படுகிறது எனவும் கூறினார். மேலும் தம்மை பா.ஜ.க இயக்கினால் காங்கிரசை வலுப்படுத்துவது குறித்து தான் ஏன் வேண்டும் என பிரசாந்த் கிஷோர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.



Source - Polimer News

Similar News