இனி அரபு நாடுகளின் தயவு தேவையில்லை -  ஐந்து ஆண்டுகளில் வாகன உற்பத்தி மையமாக உருவாகும் இந்தியா.!

இனி அரபு நாடுகளின் தயவு தேவையில்லை -  ஐந்து ஆண்டுகளில் வாகன உற்பத்தி மையமாக உருவாகும் இந்தியா.!

Update: 2020-11-10 06:45 GMT

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில்  ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியா மாறுவதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை உலகின் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கி அரசு பணியாற்றுகிறது என்றார். "எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு மேற்கொள்வதை அரசு தொடர்ந்து ஊக்குவிப்பதன் காரணமாக  உலகின் பெரிய மின்சார வாகனங்கள் சந்தையாக இந்தியா உருவெடுக்கும்," என்று குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றிய அவர், எலெக்ட்ரிக் வானங்கள் உற்பத்தி செலவை ஆட்டோமொபைல் தொழில்துறையினர் குறைத்தால், விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும், எண்ணிக்கை அதிகரிப்பதால் அது சார்ந்த தொழிற்துறையினர் பலன் பெறுவர் என்றும் கூறினார். வாகனங்களின் தரத்தை நிர்வகிப்பதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆட்டோமொபைல் துறையில் அதிகபட்ச உற்பத்தியால், வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும் என்று குறிப்பிட்டார்.

திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் வல்லமையை இந்திய உற்பத்தியாளர்கள் பெற்றிருக்கின்றனர் என்றும், இதன் வாயிலாக அதிக வேலைவாய்ப்புகளை மட்டுமின்றி, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் பெற முடியும் என்றும் தெரிவித்தார். "இ-வாகனங்கள் அதிகத் திறன் கொண்டவையாகவும், சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் இருக்கும். கச்சா எண்ணைய் இறக்குமதி மற்றும் காற்று மாசு ஆகியவை நாட்டின் இரண்டு பிரச்சினைகள். எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியை ஒருங்கிணைந்த அணுகுமுறையில் மேற்கொள்ள வேண்டும்", என்றார்.

மேலும் திரவ இயற்கை வாயு அபரிதமான அளவில் கிடைப்பதாகவும், அதன் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் திரு பிரதான் கூறினார். திரவ இயற்கை வாயுவை முன்னுரிமை எரிவாயுவாக எவ்வளவு விரைவில் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

திரவ இயற்கை எரிவாயுவின் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் வசதி ஆகிய நன்மைகளை எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதை லட்சியமாகக் கொண்டுள்ள அரசு இதற்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருவதாக அமைச்சர் கூறினார்.

Similar News