பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் ஒருவரைக் கூட விடக்கூடாது  : மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.!

பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் ஒருவரைக் கூட விடக்கூடாது  : மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.!

Update: 2020-12-06 10:41 GMT

வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் 63-வது நிறுவன தின விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இந்தியாவில் இதுவரை நடைபெற்ற கடத்தல்கள் குறித்த அறிக்கை 2019-20-ஐ இந்த நிகழ்ச்சியின்போது திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் தங்கம், அந்நிய செலாவணி, போதை மருந்து உள்ளிட்ட பல்வேறு கடத்தல்கள் குறித்து இந்த அறிக்கை விவரிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கடத்தல்களையும், குற்றச் செயல்களையும் திறம்படத் தடுத்து வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அலுவலர்களைப் பாராட்டி பேசினார். அப்போது கரோனா பெருந்தொற்றின் போதும் அவர்கள் மிகவும் சிறப்பாக பணிபுரிந்ததாக கூறினார்.

இருந்த போதிலும், நாட்டில் பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் ஒவ்வொருவரின் மீதும் மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார். ஒருவரையும் தப்ப விடக் கூடாது என்ற கண்டிப்புடன் அவர் பேசினார்.

நிதி செயலாளர் டாக்டர் அஜய் பூஷன் பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறப்பாக பணிபுரிந்த வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அலுவலர்களுக்கு அப்போது நிர்மலா சீத்தாமன் விருதுகள் வழங்கினார்.


 

Similar News