மோடியின் கொள்கைகளால் உத்வேகம் பெறும் வடகிழக்கு மாநிலம்.. இதுவே சான்று!

இந்தியாவின் வளர்ச்சியில் பிரிக்க முடியாத பகுதியாக வடகிழக்கின் வளர்ச்சி உள்ளது என குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

Update: 2023-05-05 00:45 GMT

மணிப்பூர் மாநிலத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர், மணிப்பூர் பல்கலைக்கழகத்திலும் உரையாற்றினார். 'கிழக்கைப் பார்' கொள்கையில் இருந்து மேம்படுத்தப்பட்ட, 'கிழக்கே செயல்படுங்கள்' என்ற இந்திய அரசின் கொள்கை, வடகிழக்கு பகுதிக்கு உத்வேகத்தை அளித்து, அதன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில், வடகிழக்கின் வளர்ச்சி இன்றியமையாதது என்று அவர் கூறினார்.


தனமஞ்சூரி பல்கலைக்கழகத்தில் பேசிய திரு தன்கர், வடகிழக்கு பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு வேகமாக மேம்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். மேம்படுத்தப்பட்ட ரயில் இணைப்பு, விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பிற முயற்சிகளைக் குறிப்பிட்ட அவர், வடகிழக்குக் கலாச்சாரம், பன்முகத்தன்மை, நடனங்கள் மற்றும் இயற்கைத் தாவரங்கள் உலகில் இணையற்றவை என்று கூறினார். மணிப்பூர் மக்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பல் தன் இதயத்தைத் தொட்டதாகவும், மாநிலத்தின் மகிழ்ச்சிக் குறியீடு உண்மையில் உயர்ந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.


மாணவர்களை 2047-ன் வீரர்கள் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், மாணவர்கள் பெரிய யோசனைகளை கனவு காண்பது மட்டுமல்லாமல், அவற்றை நனவாக்க வேண்டும், வளர்ச்சிக்கான வழிகளைப் பயன்படுத்தி, வேலை தேடுபவர்களை விட வேலைகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்றார். தேசிய கல்விக் கொள்கை - 2020 ஒரு தொலைநோக்கு ஆவணம் என்றும், மாற்றத்துக்கான காரணியாகும் என்றும் கூறிய அவர், கல்வி என்பது ஒரு பட்டப்படிப்புடன் மட்டுப்படுத்தப்படாமல், திறன்களை மேம்படுத்துவதற்கும் மதிப்புகளை வளர்ப்பதற்கும் வழிவகுக்க வேண்டும் என்றும் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News