இனி பெங்களூர் டூ மும்பை வெறும் 7 மணி நேரம்தான் - மத்திய அரசு கொண்டு வரும் அதிவேக நெடுஞ்சாலை
பெங்களூர்-பூனே-மும்பை பயண நேரம் 7 மணி நேரமாக குறைய அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வேகமாக நிறைவேற்றி வருகிறது.
பெங்களூர்-பூனே-மும்பை பயண நேரம் 7 மணி நேரமாக குறைய அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வேகமாக நிறைவேற்றி வருகிறது.
பெங்களூரில் இருந்து பூனே மற்றும் மும்பைக்கு ஆறு அல்லது ஏழு மணி நேரத்தில் பயணம் செல்லும் வகையில் புதிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையை மத்திய அரசு அதி வேகமாக திட்டம் தீட்டி வருகிறது.
சுமார் 699 கிலோமீட்டர் தூரம் கொண்ட மும்பை-பெங்களூர் பயண நேரம் இனி 7 மணி நேரமாக குறையும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. புதிய மும்பை-பூனே-பெங்களூர் அதிவிரைவு நெடுஞ்சாலையில் சுமார் 50,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் இதற்கான முறையான பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்க உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகள் முடிந்த பின்னர் 2028 ஆம் ஆண்டில் எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.