கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு விமான கட்டணத்தில் சலுகை.. இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு.!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று இண்டிகோ விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண சலுகையானது, குறிப்பிட்ட கால அளவுக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்குத்தான் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-24 08:03 GMT

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று இண்டிகோ விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண சலுகையானது, குறிப்பிட்ட கால அளவுக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்குத்தான் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.




 


இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை வருவாய்த் துறை அதிகாரி சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது: குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கும் பயணிகளுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

இந்த சலுகை குறிப்பிட்ட கால அளவுக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பொருந்தும் என கூறியுள்ளார்.

Similar News