நமது நாட்டு பொருட்கள் உலக அளவில் சென்றடைய வேண்டும்.. ‘‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.!

நமது நாட்டு பொருட்கள் உலக அளவில் சென்றடைய வேண்டும்.. ‘‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.!

Update: 2020-12-27 15:46 GMT

பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமைகளில் ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலமாக மக்களுடன் நேரடியாக உரையாடி வருகிறார். அதன்படி, 72வது முறையாக இந்த ஆண்டின் கடைசி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.  

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவில் தயாரிக்கப்படும் உள்நாட்டுப் பொருட்களின் உபயோகம் மற்றும் தரம் குறித்து அவர் பேசினார். நமது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் சென்றடைய வேண்டும் என கூறினார். 

மேலும், உள்ளூரில் தயாரிக்கும் பொருட்களின் தரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்று தெரிவித்த அவர் நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் உலக அளவில் சிறந்த தயாரிப்புகளை உருவாக்க தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் முன்வர வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக அலவிலான உற்பத்தி மற்றும் வியாபார சந்தையில் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டது. இருப்பினும் இந்த 2020 ஆம் ஆண்டு நமக்கு புதிய வாய்ப்புகளையும், பாதைகளையும் காட்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News