நவராத்திரி, தீபாவளி பண்டிகையின்போது தாக்குதல் நடத்த திட்டம்: டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது!

நவராத்திரி, தீபாவளி பண்டிகையின்போது நாசவேலையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

Update: 2021-10-12 07:42 GMT

நவராத்திரி, தீபாவளி பண்டிகையின்போது நாசவேலையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு தகவல் அனுப்பியது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதியை சிறப்பு போலீஸ் கைது செய்துள்ளது. அவனது பெயர் முகமது அஷரப் என்கிற அலி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவன் என்பதும் அவன் போலி இந்திய அடையாள அட்டையுடன் டெல்லியில் நடமாடியது தெரியவந்துள்ளது. அவனிடம் சிறப்பு போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Source: Maalaimalar



Tags:    

Similar News