அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடையை ஏற்க வேண்டும்!

கர்நாடகாவில் கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் சில சலசலப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-02-21 15:20 GMT

கர்நாடகாவில் கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் சில சலசலப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் பற்றி கருத்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் பள்ளி சீருடையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பற்றி பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது போன்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை ஆகும். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைவரும் ஏற்று நடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News